×

மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பலி

மேல்மலையனூர், அக். 27:மேல்மலையனூர் அருகே விவசாய நிலத்தில் மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள மேல்வலையாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி(48), விவசாயி. இவரது மனைவி அம்பிகாபதி (45). இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். நேற்று அதிகாலை பெரியசாமி தனது மனைவியுடன் அருகே உள்ள தங்களது விவசாய நிலத்திற்கு சென்றார். பின்னர் அங்குள்ள மின்மோட்டாரை இயக்கி உள்ளார். இதில் மின்கசிவு ஏற்பட்டு அவரை மின்சாரம் தாக்கியது. அப்போது அருகில் நின்று கொண்டிருந்த அவரது மனைவி அம்பிகாபதி கணவரை காப்பாற்ற முயன்றுள்ளார். இதனால் அவரையும் மின்சாரம் தாக்கியது.

இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், காலை 8 மணி அளவில் அவ்வழியே சென்ற ஊர் பொதுமக்கள், கணவன், மனைவி இருவரும் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஊருக்குள் சென்று தகவல் தெரிவித்தனர். மேலும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவலூர்பேட்ைட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து அவலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பலி appeared first on Dinakaran.

Tags : Melmalayanur ,Melmalayanur Sad ,Dinakaran ,
× RELATED கார் மோதி கல்லூரி பேராசிரியர் பலி